கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரிலும், கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வென்ற வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கிலும் போட்டியிடுகின்றனர். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன், அவினாசி (தனி) எல். முருகன், தஞ்சை எம். முருகானந்தம், மதுரை தெற்கு ராம சீனிவாசன், நாகர்கோயில் எம்.ஆர். காந்தி, விளவங்கோடு எஸ். விஜயதாரணி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொடக்குறிச்சியில் கடந்த முறை வென்ற சி.சரஸ்வதிக்கு பதிலாக அவரது மருமகளான கிருத்திகா சிவக்குமாருக்கு இம்முறை சீட் வழங்கப்பட்டுள்ளது.