தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவகங்கள் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பல லட்சம் மக்கள் சென்றுள்ளனர்.
பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில், பேருந்து, இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சில ரயில்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.