நேற்று சென்னை மாநகரில் சராசரியாக காற்றின் தரக் குறியீடு 109 ஆகவும் காற்றின் நுண் துகள்கள் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை பெருவாரியாக இருந்தது .இன்று காலை நிலவரப்படி ஆலந்தூரில் 95 , அரும்பாக்கத்தில் 106 , கொடுங்கையூரில் 68 , மணலியில் 75 , பெருங்குடியில் 7 , வேளச்சேரியில் 71 என காற்று மாசு பதிவாகியுள்ளது.
இதேபோல் செங்கல்பட்டில் 115 , காஞ்சிபுரத்தில் 82 , கும்மிடிப்பூண்டியில் 96 , கோவையில் 108 ஆக காற்று தரம் பதிவாகியுள்ளது. தற்போதே காற்று மாசு மோசமான நிலையில் உள்ள நிலையில் நேரம் செல்ல செல்ல காற்று தரம் படிபடியாக மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.