ஆம்ஸ்ட்ராங் கொலை- அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது
வட சென்னையில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். திமுக- அதிமுக ஆகிய பெரிய கட்சிகளுக்கு வட சென்னை பகுதியில் டப் கொடுக்கும் வகையில் அரசியலில் கலக்கியவர், கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே மர்ம நபர்களால் துடிக்க, துடிக்க வெட்டி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.