வாரிசு அரசியல் விமர்சனம் ஒரு இத்துப்போன குற்றச்சாட்டு.. எதிர்க்கட்சிகளை போட்டு தாக்கிய ஸ்டாலின்

Published : Jan 30, 2026, 03:14 PM IST

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும், அவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டும்தான், வெற்றி பெற முடியும். எனவே இது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு என ஸ்டாலின் கருத்து.

PREV
14
மகளிர் உதவித்தொகை

தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “2021 தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை தருவோம் என்று சொன்னோம். உடனடியாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள். அதெல்லாம் தரவே முடியாது; தமிழ்நாட்டின் நிதிநிலைமை சரியில்லை என்று சொல்லி பரப்புரை எல்லாம் செய்தார்கள்; அதேசமயம், பெண்களுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் தருவோம் என்று தங்களுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லவும் செய்தார்கள். ஆனால், மக்கள் அவர்களின் வாக்குறுதியை நம்பவில்லை. தி.மு.க. சொன்னால், சொன்னதை செய்யும் என்று நம்பிக்கையுடன் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி, இப்போது ஒரு கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிருக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று, இதுவரைக்கும் 33 ஆயிரத்து 464 கோடி ரூபாயை வழங்கியிருக்கிறோம்.

24
நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல்..

அதேபோல், மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்று சொன்னோம். சொன்னது போலவே, திமுக வெற்றிபெற்ற மறுநாளே, விடியல் பயணம் திட்டத்தில், பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரைக்கும், 13 ஆயிரத்து 387 கோடி ரூபாய் மதிப்பிலான 835 கோடிக்கும் அதிகமான பயணங்களை செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த திட்டத்தால் விளிம்பு நிலை மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுகிறது என்று தரவுகளோடு உணர்ந்து, திருநர்களுக்கும், மலைப்பகுதிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்தோம்.

நாங்கள் கொண்டு வந்த இந்த இரண்டு திட்டத்தையும், இப்போது பல்வேறு மாநிலங்களும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள், இதுதான் திராவிட மாடல், நாட்டிற்கே வழிகாட்டி என்பதற்கான அடையாளம்!

34
இத்துப்போன குற்றச்சாட்டு

இந்த க்ரோத் ஹிஸ்டரியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் பொய்களை எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பழைய ஸ்கிரிப்ட்தான்!

அதில் முதல் குற்றச்சாட்டு, வாரிசு அரசியல்! இதற்கு நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், யார் வந்தாலும், அவர்கள் மக்களுக்கு முன்னால் நின்று, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று ஓட்டு பெற்றால் மட்டும்தான், வெற்றி பெற முடியும். எனவே இது, எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் இற்றுப்போன குற்றச்சாட்டு!

44
பாஜகவின் வாஷிங் மெஷினில் வெளுத்த அதிமுக ஊழல்வாதிகள்..?

அடுத்து சொல்வது என்ன? ஊழல்! இதுவரைக்கும் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை யாராவது ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்களா? கற்பனையான குற்றச்சாட்டுகளை சொல்லி, எங்கள் மீது பழி சுமத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் பா.ஜ.க.-விடம் கேட்பது என்னவென்றால், உங்கள் கூட இருக்கும் எல்லோருமே ஊழல்வாதிகள்தான். அதிலும், உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் அதிமுக. நீங்கள் கூட்டணியில் இல்லாத சமயத்தில், அவர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகளை சொன்னீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்கள் எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? இதுதான் என்னுடைய கேள்வி.

Read more Photos on
click me!

Recommended Stories