அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மினி பேருந்து விதிகளை தமிழக அரசு இறுதி செய்துள்ளது.