கிடு, கிடுவென உயரும் மேட்டூர் அணை
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாளை காலை ஒகேனக்கல் பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது வினாடிக்கு 84,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடியாக உயர்ந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.