இந்த வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் (CCRS) ஜனக் குமார் கார்க் நேரில் வந்து திட்டத்தின் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். CMRL அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, சேவை இயக்கம் தொடர்பான அம்சங்களையும் அவர் பரிசீலித்தார். இது இந்த திட்டத்திற்கு மூன்றாவது முக்கிய ஆய்வாகும்.