தமிழகத்தில் நேற்று பரவலாக மழை
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்து வெப்பதை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை மற்றும் புறநனர் பகுதிகளான வடபழனி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தரமணி, பள்ளிக்கரணை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.