ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நற்செய்தி. இனி ஏப்ரல் மாதத்தில், 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒரே நேரத்தில் கிடைக்குமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்காக அரசு ஒரு நிவாரண முடிவை கொண்டு வந்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. தற்போது, ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மடங்கு உணவு பொருட்கள் வழங்கப்படுமென அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் அவர்கள் 3 மடங்கு உணவுப் பொருட்களைப் பெறுவார்கள்.
24
3 மாதங்களுக்கான பொருட்கள்
ஏப்ரல் மாதத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் 3 மதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒன்றாக வழங்கப்படுமென உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான உணவு தானியங்கள் ஒரே நேரத்தில் கிடைக்கும். அனைத்துப் பயனாளிகளுக்கும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் ரேஷன் கடைகளில் இருந்து உணவு தானியங்களை வாங்கிக்கொள்ளலாம். இதற்கிடையில், அரசு இந்த முடிவை மேற்கொண்டற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
34
மாநில அரசுகளுக்கு சுற்றரிக்கை
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரேஷன் தொடபாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. ஜூன் மாதம் வரையிலான உணவு தானியங்களை மத்திய அரசிடம் இருந்து முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் அரிசியை மத்திய இருப்பிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு காரணம், அடுத்த சில வாரங்களில் மத்தி ய அரசு புதிய கோதுமையை கொள்முதல் செய்ய உள்ளது. இதன் காரணமாக மாநில அரசுகளில் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் புதிய உணவு தானியங்களை சேமித்து வைக்க கிடங்குகளில் இடம் கிடைக்கும்.
குடிமக்களுக்கு ரேஷன் அட்டைகள் மூலம் இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு கோதுமை ற்றும் அரிசி கிடைக்கும். இந்த தானியங்களை நீங்கள் ஒவ்வொரு மாதமும் கொண்டு செல்லலாம். இருப்பினும், இப்போது ஏப்ரல் மாதத்தில் 3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் ஒன்றாக வழங்கப்படும். இதற்கான சரியான காரணம் முறையாக வெளியிடப்படவில்லை. ஆனால் அடுத்த ஒருசில மாதங்களுக்கு வெப்ப அலை காற்றுகள் வீசக்கூடும், வெப்ப நிலை அதிகரக்கக் கூடுமென்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.