இந்தக் காட்சிகளைப் பார்த்த பலரும், “இவ்வளவு கூட்டம் டிமார்ட் கடைக்கு தேவையா?” என்ற கேள்வியை எழுப்பினர். தமிழ்நாட்டின் பல நகரங்களில் டிமார்ட் சிறப்பாக வந்தாலும், கோவில்பட்டியில் காணப்பட்ட அளவிலான நெரிசல் அரிதானது என்றுதான் கூற வேண்டும். மதுரை போன்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிட்டால் கூட, கோவில்பட்டி மக்கள் காட்டிய ஆர்வம் வியாபார உலகில் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது. குறைந்த விலை, ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும், 'ஆஃபர்' என்ற வார்த்தையின் ஈர்ப்பு ஆகியவை மக்களை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.