நான் முதன் முதலில் திருடியது என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த மாரி செல்வராஜ்!

Published : Sep 25, 2025, 08:08 PM IST

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் காலை உணவுத் திட்டத்தை பாராட்டித் தள்ளிய மாரி செல்வராஜ், தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் குறித்து உருக்கமாக பேசினார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

PREV
14
கல்வியில் சிறந்த தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

24
இயக்குநர் மாரி செல்வராஜ்

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சிவகுமார், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மிஸ்கின், பிரேம் குமார், ஞானவேல், கிரிக்கெட் வீரர் நடராஜன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்விக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகள் மேடையேறி பேசினார்கள்.

வாழைப்பழம் திருடினேன்

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், காலை உணவுத் திட்டத்தின் பெருமை குறித்து பேசினார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு இந்த தலைப்பை கேட்கும்போதே அவ்வளவு பெருமையாக உள்ளது. நான் முதன் முதலில் பசியால் தான் திருட்டுப் பழக்கத்தை கற்றுக் கொண்டேன். நான் முதலில் வாழைப்பழத்தை தான் முதலில் திருடினேன்.

34
பசி தான் இதற்கு காரணம்

என்னுடைய வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்தது 4 கிமீ இருக்கும். 4 கிமீ நடந்து போவேன்; பின்பு நடந்து வருவேன். நான் எழும்போதே எனது அம்மா, அப்பா வேலைக்கு சென்று விடுவார்கள். பசியோடு தான் பள்ளிக்கூடம் செல்வோம். பசியோடு தான் திரும்பி வருவோம். வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைப்பழங்களை பறித்து சாப்பிடுவது தான் எங்களின் தினசரி உணவாக இருக்கும். நாஙள் பசங்க எல்லோரும் வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து அவரவருக்கு தேவையான வாழைபழங்களை சாப்பிடுவோம்.

44
பசியால் படிப்பை நிறுத்தியவர்கள் நிறைய பேர்

எங்களுக்கு பசி என்பது பெரிய போராட்டமாக இருக்கும். பசியால் படிப்பை நிறுத்தியவர்கள் நிறைய பேர். நான் கூட படித்தவர்கள் நிறைய பேர் பசியால் படிப்பை நிறுத்தியுள்ளனர். பள்ளிக்கூடம் நிறைய தூரம் இருப்பதால் பசியுடன் அவ்வளவு தூரம் போய் விட்டு வர முடியாது. 

காலை உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்த அன்று நான் அடைந்த அளவுக்கு மகிழ்ச்சியே இல்லை. இந்த ஒரு திட்டத்துக்காக நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நான் மட்டுமல்ல என்னுடன் படித்து படிப்பை பாதியில் நிப்பாட்டிய அனைவருக்கும் காலை உணவுத் திட்டம் மகிழ்ச்சி அளித்திருக்கும்'' என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories