தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும், அதிகாரத்தில் இருந்தால் தான் காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும். திமுகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி தங்களது உரிமையை கேட்டு பெற வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஆட்சி அதிகாரம் இல்லாத காரணமாக மக்களுக்கான எந்தவிதமான திட்டங்களும் செயல் படுத்த முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க வேண்டும், அதற்கு ஏற்றார் போல் எந்த கட்சியின் கூட்டணி அமைக்க வேண்டுமோ அதற்கு நாங்கள் செல்ல தயாராக உள்ளோம்.