இந்த விபத்தில் இரண்டு பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். வலியால் அலறி துடிப்பதை பார்த்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு ஐந்து ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.