“பிரதமர் மோடி தமிழ் மண், மக்கள், மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர். சோழர்களின் பெருமையை உணர்ந்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது பாஜக.” எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும், “பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என ஒரு மசோதாவை நாங்கள் தாக்கல் செய்தோம். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் சிறைக்குச் சென்ற பிறகும் பதவியில் நீடித்தனர். இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு இந்த மசோதாவை 'கறுப்புச் சட்டம்' என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. அவரே இருண்ட ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.” என்றார்