நிபந்தனைகள் நீக்க திட்டம்
தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கும் தகுதிகள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு செயல்படுத்தியுள்ள இந்த மகளிர் உரிமைதொகை திட்டத்தை மற்ற மாநிலங்களும் காபி அடித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கர்நாடாகவில் நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி மகளிர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதே போல ஆட்சிக்கு வந்ததுத் முதல் திட்டமாக மாதம் 2ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல தெலங்கானா மாநிலத்திலும் மகளிர்களுக்கு மாதம், மாதம் உதவிடும் வகையில் 2500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது