தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற பெயரில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டார். ஆனால் தற்போது பாமக.வில் ஒரு அணி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவும், ஒரு அணி ஸ்டாலினை முதல்வராக்கவும் பிரசாரம் செய்ய தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. காரணம் பாமகவில் தற்போது தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் தான்.
கட்சியின் நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான் என ராமதாஸ்ம், கட்சியின் தலைவர் நான் தான், கட்சி என் பக்கம் தான் என அன்புமணியும் தொடர்ந்து எதிர் எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் யார் பின்னார் போவது என்று தெரியாமல் நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.