பாமகவில் தந்தை மகனுக்கும் இடையேயான அதிகார மோதல் உச்சம் பெற்றுள்ளது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்படுவது மட்டுமல்லாமல் அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும் புதிய நிர்வாகிகளை நியமித்தும் வந்தார். ஆனால் அன்புமணி அவரவர் வகித்து வந்த பதவிலேயே தொடர்வதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் யாரோ தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்து இருப்பதாக கூறி ராமதாஸ் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் WI-FI மூலம் அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.