தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை திசை திருப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பியவர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா,
சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்டப் பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.