தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெருக்கடியில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி பி.எச்.தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிபதி முதல் கேள்வியாக விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கிழே விழுந்தது நீங்கள் அதை பார்த்தீர்களா என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.