திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி மகனாகப் பிறந்தவர் தீரன் சின்னமலை. இவர் இளம் வயதிலேயே பல்வேறு போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்தவர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை. இவரது நினைவு தினம் ஆடி 18ம் நாளான வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.