ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

First Published Aug 1, 2023, 10:57 AM IST

சுதந்திரப் போட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

erode

ஈரோடு மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆடி 18ம் நாளான வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  இதனை காரணமாக அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

இதனை ஈடும் செய்யும் வகையில் வரும் 12 ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும்.  அதேபோல், தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 3ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!