“சும்மா தமிழ்நாடே அதிரனும்” மதுரை மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு கட்டளையிட்ட தலைவர் விஜய்

Published : Aug 12, 2025, 11:32 AM ISTUpdated : Aug 12, 2025, 11:52 AM IST

மதுரை மாவட்டத்தில் வருகின்ற 21ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாட்டுக்கு மாநிலமே அதிரும் வகையில் தயாராக வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

PREV
13
தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு

தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற 21ம் தேதி மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்... இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்...

23
ஆகஸ்ட் 21ல் மாநில மாநாடு

வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்... இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியிலி நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...

33
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்

முத்தமைிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறது தான் இந்த மாநாடு... அதனால தான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, “வாகை சூடும் வரலாறு திரும்புறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி...

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்,

மாற்று சக்தி நாமன்று,

முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories