இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு எல்.முருபன் தான் பொறுப்பு. அந்த துறைக்கான அமைச்சர் அவர்தான். கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.