கன்னியாகுமரியில் படகுப் பயணம்! ஆன்லைன் புக்கிங் வசதி அறிமுகம்!

Published : Aug 08, 2025, 07:53 PM IST

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்திலிருந்து விடுபடுவார்கள்.

PREV
14
நீண்ட நாள் கோரிக்கை

சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்திலிருந்து விடுபடுவார்கள்.

24
கன்னியாகுமரி சுற்றுலா

முக்கடலும் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை மற்றும் படகுப் பயணம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.

34
விவேகானந்தர் பாறை

இதுவரை, விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் படகு டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர், சிலர் டிக்கெட் கிடைக்காமல் பயணம் செய்யாமலேயே திரும்பினர்.

இந்தச் சூழலில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல், https://www.psckfs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் படகுப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

44
இனிய பயண அனுபவம்

இந்த புதிய வசதி, சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயண நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், பயண அனுபவமும் இனிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories