தொடர்ந்து நீதிபதி, ''நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டாம் என சேகர்பாபு (இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்) சொன்னாரா? அவர் சொல்லி தான் இப்படி செஞ்சிங்களா? என்று கேட்டார். அதற்கு மதுரை துணை ஆணையர் இனிகோ திவ்யன், ''இது நானாக சுயமாக எடுத்த முடிவு'' என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதவர்களை அப்படியே விட முடியுமா?
திங்கட்கிழமை நடவடிக்கை
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்யவில்லை?முழுமையாக ஒரு மாதம் அவகாசம் இருந்தும் எழுத்துப்பூர்வ பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை'' என்றார்.
அதற்கு தமிழக அரசு சார்பில், அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தெரிவிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.