என்னை பேசறதுக்கு நீங்க யாரு? ஓரளவு தான் பொறுமை.. திமுக எம்.எல்.ஏ.வை விளாசிய ஜோதிமணி.. முற்றும் மோதல்!

Published : Jan 26, 2026, 07:52 PM IST

காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று ஜோதிமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

PREV
14
காங்கிரஸ், திமுக மோதல்

சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணி ஊசலாடி வருகிறது. காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட பலர் ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக திமுகவினருக்கும், சில காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

24
பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்

இதற்கிடையே மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, ''மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற காங்கிரஸ்காரர்கள் அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து அவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது. 

இந்தியா கூட்டணியை நாம் தான் காப்பாற்றுகிறோம். நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதிக்கு 3,0000, 4,000 ஓட்டுகள் தான் உள்ளது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். ஆனால் அவர்கள் இப்படி பேசுகிறார்கள்'' என்றார்.

34
மாணிக்கம் தாகூர் பதிலடி

கோ.தளபதிக்கு பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், ''இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது'' என்று கூறியிருந்தார்.

ஜோதிமணியும் காட்டம்

இந்த நிலையில், என்னை பேசுவதற்கு நீங்கள் யாரு? என்று கோ.தளபதிக்கு ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஜோதிமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?

44
வேடிக்கை பார்க்க மாட்டோம்

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.

 களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம்.

கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்

கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது'' என்று கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories