எங்க பெயரை சொல்லியே காங்கிரஸ் அதிக சீட்டு வாங்கிட்டாங்க! இந்த முறை ஜெயக்குமாருக்கு சீட் கிடையாது.. TVKக்கு வரலாம்.! KAS

Published : Mar 05, 2026, 01:40 PM IST

Sengottaiyan: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கப்போவதில்லை. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம். அவரது மகனுக்கு தான் சீட் கிடைக்கப்போகிறது.

PREV
14
திமுக - காங்கிரஸ் கூட்டணி

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெக இணையும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தில் தீவிர முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

24
ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

இந்நிலையில் ஈரோட்டில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழக வெற்றிக் கழகத்தால் காங்கிரசுக்கு பயன் கிடைத்து இருக்கிறது. எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவோம் என்று சொல்லி கூடுதல் சீட்டுகளை பெற்றுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை பெறக்கூடிய நிலை தற்போது உள்ளது.

34
தவெக கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும்

ஆட்சியில் பங்கு என்று நாங்கள் அறிவித்ததால் தான் மற்ற கூட்டணிகளில் பங்கு கேட்கிறார்கள். தவெக வலிமையான கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ளும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

44
ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கப்போவதில்லை. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு வரலாம். அவரது மகனுக்கு தான் சீட் கிடைக்கப்போகிறது. அதனால்தான் ஆதங்கத்தில் ஜெயக்குமார் பேசுகிறார். அவர் எனக்கு நல்ல நண்பர்; அவரது கருத்துக்கு பதில் சொல்வது நன்றாக இருக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories