உச்சத்தில் தக்காளி, வெங்காய விலை
தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சமையலுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த இரண்டும் இல்லாமல் உணவு சமைப்பது என்பது சவலான விஷயமாகும்.
அந்தளவிற்கு சமையலோடு இணைந்து இருப்பது தக்காளியும் வெங்காயமும், ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளியின் பங்கு தேவையாக உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல் முதல் வீடு வரை தக்காளி சட்னி தயாரிப்பது நிறுத்தப்பட்டது.