அடுத்தாக 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த பிறகு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை, பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு, மஞ்சள் பை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் எந்த வித பண பரிசும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக அரசு வழங்கிய பரிசு பொருட்கள் தரமானதாக இல்லையென புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்போடு சேர்ந்து 1000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.