கோபத்தின் உச்சியில் ஐயா..! புதிய கட்சி தொடங்குவாரா டாக்டர் ராமதாஸ்.?

Published : Sep 15, 2025, 02:10 PM IST

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியை கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ள நிலையில், ராமதாஸ் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.

PREV
14

பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இது 1989ஆம் ஆண்டு மருத்துவர் எஸ். ராமதாஸ் தொடங்கினார். அவரது மகன் அன்புமணி ராமதாஸ், கட்சியின் செயல்தலைவராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே உட்சகட்ட மோதல் ஏற்பட்டது.

 ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, தன்னைத்தானே கட்சித் தலைவராக அறிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகக் குழுவை கலைத்து, அதில் அன்புமணியை நீக்கி புதிய குழுவை அமைத்தார். மேலும், 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்றினார்.

24

ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி தான் தான் பாமக தலைவர் எனவும், பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவித்தார். இதனையடுத்து அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவியிடங்களுக்கான தேர்தலை மேலும் ஒரு வருடம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மான நகல்கள் தேர்தல் ஆணைத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டது. இதே போல ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 16 குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.

34

16 குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்க அன்புமணிக்கு இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி பதில் அளிக்காத காரணத்தால் கடந்த வாரம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அறிவித்தார். ஆனால் இதனை அன்புமணி தரப்பு நிராகரித்த நிலையில் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லையென கூறியது. 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கட்சியின் மாம்பழம் சின்னம் மற்றும் A ஃபார்ம், B ஃபார்ம் ஆகியவற்றில் அன்புமணியின் கையெழுத்து மட்டுமே செல்லுபடியாகும் என கூறினார். 

44

பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் ஆரம்பித்த கட்சியான பாமகவில் தனக்கு அதிகாரம் இல்லையென்ற தகவலால் ராமதாஸ் கடும் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வரும் ராமதாஸ், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட நிபுணர்களோடு ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் அன்புமணிக்கு டப் கொடுக்க புதிய கட்சியை தொடங்கலாமா.? என ஆதரவாளர்கள் யோசனை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ராமதாஸ் பாமக தனது கட்சி என உறுதியாக இருப்பதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories