தமிழகம் முழுவதும் மகளிர் உரிமை தொகை
இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயன்பெறாத மகளிருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி,
தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறினார். அதில் முதல் கட்டமாக தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.