மேலும் 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000 வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு வருமான வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிகப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் உயர் தர சிகிச்சையை பெற்றனர். இந்த நிலையில் மக்களுக்கு அவசர தேவைக்கு உதவும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.