வடகிழக்கு பகுதிகள்
அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா பகுதிகளில் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்கள்
அடுத்தாக மேற்கு மத்யபிரதேசம், சத்தீஸ்கர், பீஹார், ஜார்கண்ட், ஒடிசா பகுதிகளில் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பலத்த மழை பெய்யும். மேலும் சப்-ஹிமாலயன் மேற்கு வங்காளம், சிக்கிம் பகுதிகளில் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
வடமேற்கு இந்தியா
கிழக்கு உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.