சங்கீதா குறித்து முதல் முறையாக ஒரே வரியில் சொன்ன தவெக விஜய்!

Published : Mar 07, 2026, 07:28 PM IST

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன்.

PREV
14
தவெக மகளிர் தின கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் மற்றும் அக்கட்சி பெண் நிர்வாகிகள் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதாவது 60 வயது வரையிலான அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.2500, ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

24
30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறாய், உறுதிமொழிகளை கொடுக்கிறாய். ஆனால், ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என்ற கேள்வி வரும். அதற்கு எளிமையாக ஒன்றை கூறிக் கொள்கிறேன். நம் மாநிலத்துக்கான மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி. அதில், 30 சதவீதம் ஸ்டாலின் சார் வரிக்கு போகிறது. இந்த பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கும் நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சாருக்கு செல்கிறது. மீதமுள்ள 10 சதவீதம் அவரது அமைச்சருக்கு செல்கிறது. மொத்தம் 30 சதவீதம் ஆகிவிட்டதா? அரசாங்கத்திற்கு தான் வரி கொடுப்பார்கள். அரசாங்கமே ஒருவருக்கு வரி கொடுக்கிறது என்றால், அதற்கு பெயர் ஸ்டாலின் சார் வரி தானே.

34
ரூ.5000 மக்களுக்கு வழங்கியது எப்படி?

மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை நீங்கள் அப்படியே சைடில் ஒதுக்காமல், மொத்த பணத்தையும் மக்களுக்கே செலவு செய்துவிட்டால் ஒரு சூப்பரான நல்ல அரசாங்கத்தை கொடுக்க முடியும். அரசிடம் சாசில்லை என்பது பொய். அரசாங்கத்தில் காசு இல்லை காசு இல்லை என்று கூறிவிட்டு விடியற்காலியில் ரூபாய் 5000 மக்களுக்கு வழங்கியது எப்படி. ஸ்டாலின் சார் டாக்ஸை ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும். அரசின் பற்றாக்குறைக்கு ஊழலே காரணம் என்றார்.

44
நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம்

அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக விஜய் மனம் திறந்து பேசினார். தற்போது நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நீங்கள் கஷ்டப்படுவதை நான் பார்க்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல. அதனால், எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நாம் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம். நீங்கள் வருத்தம் அடைய வேண்டாம். எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது என்றார். தவெக தலைவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கக்கோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories