டாஸ்மாக்கால் அதிகரிக்கும் கைம்பெண்கள்! அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடுவது சரியா! சொல்வது யார் தெரியுமா?

Published : Mar 07, 2026, 04:55 PM IST

TASMAC: மகளிர் தினத்தைக் கொண்டாடும் தமிழக அரசு, மறுபுறம் மதுவை விற்பனை செய்து பெண்களை கைம்பெண்களாக்குவது முரண்பாடாக உள்ளது என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

PREV
15
தமிழக அரசு மது விற்பனை

ஒருபுறம் பெண்களை கைம்பெண்களாக மாற்றிக்கொண்டே மதுவை அரசே விற்பனை செய்துவிட்டு, மறுபுறம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களைக் கௌரவிப்பது வேடிக்கையானது என ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சம்.

25
கைம்பெண்கள்

ஒருபுறம் பெண்களை கைம்பெண்களாக மாற்றிக்கொண்டே மதுவை அரசே விற்பனை செய்துவிட்டு, மறுபுறம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களைக் கௌரவிப்பது வேடிக்கையானது என ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சம்.

35
மதுவுக்கு அடிமை

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கம் என்று மேடைகளில் பேசிக்கொண்டே அந்தப் பெண்களின் கணவன்மார்களையும், மகன்களையும் மதுவுக்கு அடிமையாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதும் முரண்பாடுகளின் உச்சம். மதுவினால் ஏற்படும் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அரசு வழங்கும் வெறும் வாழ்த்துகளோ அல்லது சில விருதுகளோ அவர்களின் வாழ்வை மேம்படுத்தாது.

45
பூரண மதுவிலக்கு

தமிழகப் பெண்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஆகச்சிறந்த, உண்மையான பரிசு "பூரண மதுவிலக்கு" மட்டுமே. உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை விட, அவர்களின் தாலி பாக்கியத்திற்கும், குடும்ப அமைதிக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே உண்மையான சமூகநீதியாகும்.

55
ராமதாஸ்

இதற்கிடையே அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவில் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 56 வெற்றியாளர்களில் 19 பேர் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது மகளிர் தின நன்னாளில் பெருமை தரும் செய்தியாகும். வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும். எங்களின் பெண் தெய்வங்களுக்கு இதயம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories