நீங்கள் IRCTC இணையதளம் அல்லது மற்ற செயலியில் இருந்து இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்தால், வண்டிகள் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, அந்த ரயிலில் கரெண்ட் இருக்கை இருப்பதைக் காணலாம். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் தான் கவுண்டர்களிலும் கரெண்ட் டிக்கெட் முன்பதிவு திறக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன்பு வரை கரெண்ட் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
IRCTCல் அல்லது குறிப்பிட்ட செயலியில் உள்நுழைந்த பிறகு, 'Train' பட்டனைக் கிளிக் செய்யவும். முன்பதிவு டிக்கெட்டைக் கிளிக் செய்து, நீங்கள் பயணிக்க விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நாளின் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு Search Train பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான ரயிலை தேர்வு செய்யவும். அந்த ரயிலுக்கு கரெண்ட் டிக்கெட் ஏதேனும் இருந்தால், CURR_AVBL அங்கு காட்டப்படும். அதைத் தேர்ந்தெடுத்து பயணிகளின் விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் நிரப்பவும். நீங்கள் பணம் செலுத்தியவுடன் உங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பதிவு செய்யப்படும்.
ரெஸ்ட் கொடுத்த கனமழை: மாற்று பாதையில் அறிவிக்கப்பட்ட முக்கிய ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்