பல சிம்கார்டுகள் பயன்படுத்த காரணம் என்ன.?
இருந்த போதும் குடும்ப சூழல், காதல் தோல்வி, கடன் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களுக்காக ஒருவர் பழைய எண்களை பயன்படுத்தாமல் புதிது,புதிதாக எண்களை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இது பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் தீவிரவாத சம்பவத்தில் ஈடுபடுபவர்களும் பல எண்களை பயன்படுத்தி சதி வேலையில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் நம் நாட்டில் 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச சிம் கார்டுகளின் எண்ணிக்கையை கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. மேலும் இந்த விதிகளை மீறினால் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.