ரேஷன் கார்டின் முக்கியத்துவம்
நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நியாய விலைக்கடைகள் இயங்கி வருகிறது. அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர். மேலும் அரசின் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு, தீபாவளி பரிசு தொகுப்பு, வெள்ள நிவராணம் பெறுவதற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.