இந்த திட்டத்தின் படி ஒரு பெண் குழந்தை மட்டுமிருந்தால் தலா ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 என வழங்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்த பின்னர் இந்த திட்டத்தின் முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகை உடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
2-வது குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் இருந்தால் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். குழந்தையின் தாயார் 35 வயதுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72000 வரை இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்பிட சான்று மற்றும் ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றுகளையும் பெற்று சமர்பிக்க வேண்டும்.