அதிர்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியான முடிவுகளும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜகவை வீழ்த்தி திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜகவை டெபாசிட் இழக்க செய்துள்ளது.
கோவை தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கோவையில் அதிமுகவின் வாக்குகள் சர சர சரவென குறைந்துள்ளது. கோவையில் உள்ள 6 தொகுதியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட வாங்க முடியாத அளவிற்கு குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.