மேலும் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வு மையம், ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வழங்கி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.