பிப்ரவரி 21 முதல் 23 வரை விடாமல் ஊத்தப்போகும் மழை.! விவசாயிகளுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்!

Published : Feb 19, 2026, 12:16 PM IST

Delta Weatherman: தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும்.

PREV
15
வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவுகிறது. அதாவது இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிபொழிவும், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

25
காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

35
தென் தமிழகத்தில் மழை

இதன் காரணமாக நாளை முதல் தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
சென்னை வானிலை நிலவரம்

பனிமூட்டம் எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது. இந்நிலையில் பிப் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

55
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில்: தாழ்வு பகுதியால் திரும்பும் மழை வானிலை என்ற தலைப்பில் தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப் 21 முதல் 23 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும். சம்பா, தாளடி பட்ட அறுவடை விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை பத்திரப்படுத்தவும், முன்னெச்சரிக்கையாக அறுவடை பணிகளை பிப் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories