இதன் தொடர்ச்சியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்துர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.