கோவையில் கன மழை
கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அதிகபட்சமாக 6.86 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் உழவர் நலத்துறை இயங்கும் வளாகம், ஆய்வகங்களில் மழை நீர் புகுந்துள்ளது. கோவை, வடவள்ளி லாலி ரோடு பகுதியில் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், இங்கு ஆயிரக் கணக்கான மாணவ - மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் மருதமலை செல்லுகின்ற முக்கிய சாலையாக உள்ளது இந்த சாலை, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த முக்கிய சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது.
கோவை மழையில் சிக்கித்தவிக்கும் மக்கள்!!