இந்நிலையில் நேற்று மாலை வேலூர், விழுப்புரம், அரியலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்த திடீர் மழையால் அனலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் சற்றே மகிழ்ச்சியடைந்தனர்.