வெளுத்து வாங்கும் கனமழை.. ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published : Nov 26, 2025, 08:32 AM ISTUpdated : Nov 26, 2025, 08:42 AM IST

தொடர் கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
13
டெல்டா மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24ம் தெதி தமிழகத்தின் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து தமிழகத்தின் கடலோரத்தில் வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

23
முன்னெச்சரிக்கையை துரிதப்படுத்தும் அரசு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கூடுதல் மின்கம்பங்கள், மின் தளவாடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

33
பள்ளிகளுக்கு விடுமுறை

இதனிடையே கடலோர மாவட்டமான ராமேஸ்வரத்தில் இரவு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories