தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேதிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறு தேதி அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நாகை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.