இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் வெதர்மேன் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று இரவு சென்னையில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று கூறி இருக்கிறார். கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து இப்பொழுது மழை மேகங்கள் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியுள்ளது என்றும், இரவு நேரத்தில் அது சென்னையை நோக்கி நகர்ந்து இரவு முதல் நாளை காலை வரை சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறி இருக்கிறார். அதேபோல கோவையை பொறுத்தவரை இந்த ஆண்டு அதிகமான மழைப்பொழிவு செய்த மாதமாக அக்டோபர் மாறி இருக்கிறது என்றும், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை பொறுத்தவரை மீண்டும் அங்கு ஒரு புயல் உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.