Tamilnadu Rain: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பநிலை மேலும் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கரூர், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 4 வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதுமட்டுல்லாமல் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியவில்லை. மார்ச் மாதத்திலேயே வெயில் இப்படி என்றால் மே மாதம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 2-4° செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24
வறண்ட வானிலை
அதாவது இன்று முதல் 27ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28 முதல் 31ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
34
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல் மார்ச் 27 முதல் 29 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.